வணக்கம்!

வணக்கம்!

ஒரு சிறிய மீன்பிடி கிராமமாக இருந்த சிங்கை, பிரிட்டிஷ் அதிகாரம், உலகப்போர், ஜப்பானியர் ஆக்கிரமிப்பு, மலேசியாவுடம் சேருதல், எனப் பல கஷ்டங்களைக் கடந்து, போராடி சுதந்திரத்தைப் பெற்று, இவ்வருடம் ஆகஸ்ட் 9-ஆம் தேதி, தன் 50-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. அன்று ராஃபிள்ஸ் கண்டுப்பிடித்த சிறிய மீன்பிடி கிராமம், இன்று அது உலகின் முக்கிய வணிக மையங்கள் ஒன்றாகவும் மிகப்பெரிய நிதி மையங்களில் ஒன்றாகவும் ஐந்து பரபரப்பான துறைமுகங்கள் ஒன்றாகவும் திகழ்ந்து, வெற்றியும் புகழும், வளமும் நிறைந்த நிலையை அடைந்துள்ளாது.


இப்பேர்ப்பட்ட முன்னேற்றத்தை அடைந்து, பெருமையுடன் தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடவிருப்பதை முன்னிட்டு, சிங்கப்பூரைப் பற்றிய தகவல்களைப் பற்றி வலைப்பதிவுகளை நான் எழுதவிருக்கிறேன். இவ்வலைப்பதவுகள், சிங்கப்பூரின் தேசிய தினம், மொத்த பாதுகப்பு தினம், தேசிய சின்னங்கள், கல்வி, ஆகியவையோடு, மற்ற முக்கியமான/ சிறப்பான அம்சங்களைப் பற்றி எழுதவுள்ளேன்.


சிங்கப்பூரின் 50-வது பிறந்தநாளை, அதைப் பற்றி மேலும் அறிந்துக்கொண்டு கொண்டாடலாம்!



இரணியன் அம்ரித்தா

வகுப்பு: 304

பள்ளி: ராஃபில்ஸ் பெண்கள் பள்ளி (உயர்நிலை)

Saturday 28 March 2015

#4: சிங்கப்பூரின் தேசிய சின்னங்கள் (பாகம் 2)

முந்தைய வலைப்பதிவில், தேசிய கீதம், உறுதிமொழி, தேசிய கொடி ஆகிய மூன்றைப் பற்றியும் பார்தோம். இப்பகுதியில் மேலும், தேசிய சின்னங்கள் ஆகிய மாநில முகடு, சிங்கத்தலை சின்னம், மற்றும் தேசிய மலர் பற்றி இவ்வலைப்பகுதியில் காணலாம்.


1. மாநில முகடு (state crest)
“National Coat of Arms” எனப் படும் சிங்கப்பூரின் முகடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் துணை பிரதமர், டாக்டர். தொ சின் சை (Dr. Toh Chin Chye) தான் யோசனை செய்து வைத்திருந்தார். மாநில முகடு, தேசிய கொடி ஆகிய அவரின் இரண்டு யோசனைகளையும் வரைந்து நினைவாக்கியது, கலாச்சார அமைச்சில் பணிப்புரிந்த திரு. ஜோசப்ஃ தியோ (Mr. Joseph Teo).

சிங்கப்பூரின் மாநில முகடு
இம்முகடில், தேசிய கொடியைப் போன்று உள்ள ஒரு கேடயமும், அதற்கு இடது பக்கத்தில் ஒரு சிங்கமும், வலது பக்கத்தில் ஒரு புலியும் உள்ளது.

தேசியக் கொடியைப் போல, இதிச் இருக்கும் கவசத்தில் சிவப்பு பகுதி, உலக சகோதரத்துவத்தையும், மனித சமத்துவத்தையும், வெள்ளைப் பகுதி, நீடித்துநிலைத்திருக்கும் பவித்திரத்தன்மையையும் நல்லொழுக்கத்தையும் பிரதிபலிக்கின்றன. கொடியின் அறை சந்திரன், இளந்தேசம் உச்சிக்கு முன்னேறுவதையும் பிரதிபலிக்கின்றது. 5 நட்சத்திரங்களும், சிங்கப்பூர் அடய இலக்காகக் கொண்டிருக்கும் 5 பண்புகளைக் குறிக்கின்றன. அவ்வைந்து பண்புகள் இவையே: ஜனநாயகம், அமைதி, முன்னேற்றம், நீதி, சமத்துவம்.

‘Singapura’ என்பது, மலாய் மொழியில் ‘Lion city’ என்பதற்கு சமம். ஆகையால், முகடில் இருக்கும் சிங்கம், சிங்கப்பூரைப் பிரதிபலிக்கிறது. இதில் இருக்கும் புலி, சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இருந்த கடந்தப் பந்தங்களைக் குறிக்கிறது. அதோடு, சிங்கப்பூரின் கொள்கை, “Majulah Singapura” (முன்னேறு சிங்கப்பூர்) என்பதைக்கொண்டுள்ளா நீல நிற ரிபன் ஒன்று உள்ளது.

அதிக மதிப்புடனும் மரியாதையுடனுமே இம்முகடை நாம் பயன்படுத்த வேண்டும். அரசாங்க அமைச்சுகளுக்கு மட்டுமே இச்சின்னத்தைப் பயன்படுத்த அனுமதியுள்ளது. மற்றவர்கள் தங்கள் சொந்த பயன்களுக்கு உபயோகப் படுத்த, அரசாங்கத்திடமிருந்து அனுமதிப் பெறுவது அவசியம்.


2. சிங்கத்தலை சின்னம் (The Lion Head Symbol)
இச்சின்னம், தேசிய கொடி, மாநில முகடு ஆகியவை இருக்கும் அளவிற்கு முறைசாரா சின்னம். இச்சின்னத்தை, பொது மக்களும் நிறுவனங்களும் அனுமதிப் பெறாமல், நாட்டுப் பற்றை வெளிப்படுத்தவும் ஊக்குவிக்கவும் பயன்படுத்தலாம். சுலபமாக சிங்கப்பூரின் சின்னம் என்று இச்சின்னத்தை பார்த்தவுடனே அடையாளம் காணலாம்.
1989-யில், பொது மக்கள் பயன்படுத்த ஒரு தேசிய சின்னம் தேவை என்பதையறிந்து, அரசாங்கம் தீர்வு செய்தது. கலைப்பள்ளி மாணவர்கள், ஒரு சின்னத்தை வரையுமாறு கேட்கப்பட்டனர். அதில் தேர்வு செய்யப்பட்டது, திரு மைகல் லீ.

சிங்கத்தலை சின்னம்
சிங்கம் நமது நாட்டிற்கு முக்கியமான ஒரு விலங்கு. அதன் தலையைக் கொண்டுள்ள இச்சின்னம், தைரியம், பலம், சிறந்துவிளங்குதல், ஆகிய மூன்று பண்புகளை பிரதிபலிக்கிறது. இச்சின்னம், நமது தேசிய வண்ணங்களான சிவப்பு மற்றும் வெள்ளையைக் கொண்டுள்ளது. மேலும், சிங்கத்தின் 5 தலைமுடிப் பிரிவுகள், தேசிய கொடியின் 5 நட்சத்திரங்கள் குறிக்கும் நியமங்களைக் குறிக்கிறது: ஜனநாயகம், அமைதி, முன்னேற்றம், நீதி, சமத்துவம்.

இச்சின்னம் முறைசாரம் இல்லாமல் இருந்தாலும், அதை மதித்துப் பயன்படுத்துவது சிங்கப்பூரரிகளின் கடமையாகும்.


3. Vanda 'Miss Joaquim' - சிங்கப்பூரின் தேசிய மலர்.
இந்த ஆர்கிட் மலர், Vanda hookeriana, Vanda trees ஆகிய இரண்டின் கலப்பு ஆகும். இதை முதல் முதலாக வளர்த்த Agnes Joaquim-இன் நினைவில், இம்மலருக்கு Vanda 'Miss Joaquim' என்றப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பல இனங்களைக் கொண்டுள்ள சிங்கப்பூரைப் பிரதிபலிக்க, 1981-யில், இம்மலர், நமது தேசிய மலராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இம்மலர், இளம் நாடான சிங்கப்பூரின் தனிச்சிறப்பையும், பல்லிண ஒற்றுமையையும் குறிக்கிறது.

சிங்கையின் தேசிய மலர்: Vanda 'Miss Joaquim' மலர்



No comments:

Post a Comment