சிங்கப்பூரில், பெரும்பாலானோர் சீனர்கள், மலாய்க்காரர்கள், அல்லது
இந்தியர்கள். அனைவரும் சிதறிக்கிடக்காமல் கலந்து வாழ்ந்தாலும், அவ்விணத்தினற்களின்
கலாச்சார பண்பாட்டுகளை பிரதிபலிக்கும் வண்ணம் மூன்று இனப் பகுதிகள் உள்ளன: சைனாடவுன்,
கம்போங் கிளாம், லிட்டில் இந்தியா. மேலும், சிங்கப்பூரில் இருக்கும் இம்மூன்று இனங்களின்
முக்கிய பண்டிகைகள் பொது விடுமுறைகளாக திகழ்கின்றன. உதாரணத்திற்கு, சீனப்புத்தாண்டு,
ஹரி ராயா, தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆகியவையைக் குறிப்பிடலாம். கலாச்சாரத்தை மேலும் வலியுறுத்த,
பல நிறுவனங்கள் பண்டிகைக் கொண்டாட்டங்களை சமூக மன்றங்களின் ஏற்பாடு செய்கின்றனர். உதாரணத்திற்கு,
சமீபக் காலத்தில், நன்யாங் தொழினுட்பக் கல்லூரி, தங்கிலின் சமூக மன்றத்தில், பொங்கல்
விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர். அது மிகவும் வெற்றிகரமாக நடைப்பெற்றது.
No comments:
Post a Comment