வணக்கம்!

வணக்கம்!

ஒரு சிறிய மீன்பிடி கிராமமாக இருந்த சிங்கை, பிரிட்டிஷ் அதிகாரம், உலகப்போர், ஜப்பானியர் ஆக்கிரமிப்பு, மலேசியாவுடம் சேருதல், எனப் பல கஷ்டங்களைக் கடந்து, போராடி சுதந்திரத்தைப் பெற்று, இவ்வருடம் ஆகஸ்ட் 9-ஆம் தேதி, தன் 50-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. அன்று ராஃபிள்ஸ் கண்டுப்பிடித்த சிறிய மீன்பிடி கிராமம், இன்று அது உலகின் முக்கிய வணிக மையங்கள் ஒன்றாகவும் மிகப்பெரிய நிதி மையங்களில் ஒன்றாகவும் ஐந்து பரபரப்பான துறைமுகங்கள் ஒன்றாகவும் திகழ்ந்து, வெற்றியும் புகழும், வளமும் நிறைந்த நிலையை அடைந்துள்ளாது.


இப்பேர்ப்பட்ட முன்னேற்றத்தை அடைந்து, பெருமையுடன் தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடவிருப்பதை முன்னிட்டு, சிங்கப்பூரைப் பற்றிய தகவல்களைப் பற்றி வலைப்பதிவுகளை நான் எழுதவிருக்கிறேன். இவ்வலைப்பதவுகள், சிங்கப்பூரின் தேசிய தினம், மொத்த பாதுகப்பு தினம், தேசிய சின்னங்கள், கல்வி, ஆகியவையோடு, மற்ற முக்கியமான/ சிறப்பான அம்சங்களைப் பற்றி எழுதவுள்ளேன்.


சிங்கப்பூரின் 50-வது பிறந்தநாளை, அதைப் பற்றி மேலும் அறிந்துக்கொண்டு கொண்டாடலாம்!



இரணியன் அம்ரித்தா

வகுப்பு: 304

பள்ளி: ராஃபில்ஸ் பெண்கள் பள்ளி (உயர்நிலை)

Saturday 28 March 2015

#2: சிங்கப்பூரின் மொத்த பாதுகாப்பு தினம்

ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி சுகந்திரம் கிடைத்தது. இந்த நாளை சிங்கபூரர்கள் தேசிய தினமாக கொண்டாடுகின்றனர். ஆனால், ஆண்டுதூரும் பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி அன்று ஜப்பானியர்கள் 1942-இல் சிங்கப்பூரை ஆக்கிரமிப்பு செய்த நாளைநினைவு கூறுகின்றனர் என்பது உங்களுக்கு தெர்யுமா? இத்தினத்தை 'மொத்த பாதுகாப்பு தினம்', அதாவது Total Defence Day , என்ற பெயரோடு, வருடம் தவறாமல் சிங்கபூரர்களால் அனுசரிக்கப்படுகிறது.

மொத்த பாதுகப்பு தினத்தின் சின்னம்
இத்தினதைக் ஞாபகத்தில் வைத்து கொள்வதற்கு பல்வேறு காரனம்கள் உண்டு. ஜப்பானியர்களை எதிர்த்து போராடி, வீர மரணத்தை எதிர்நோக்கிய  நம் இராணுவ வீரர்களையும் அவர்களின் மதிப்புமிக்க பணியையும் பங்காரளையும் நினைவுகூர்ந்து பாராட்ட சிங்கபூரர்கள் ஊக்குவிக்கப் படுகின்றனர். நம் நாடு இன்று உள்ள உயர்ந்த நிலையை அடைய உதவியவர்களை ஞாபகம் கொள்ளவதே அவர்களுக்கு கட்டும் மரியாதையை அல்லவா? மேலும், இன்றுள்ள சிங்கபூரின் பாதுகாப்பான நிலையை எண்ணி பெருமை பாடவும் செய்கிறது. ஜப்பானிய ஆக்கிரமிப்பின் பொது இருந்த சிங்கபூரிலிருந்து நாம் இன்றுவரை கண்ட அபார வளரிசியையும் இந்நாள் வலியுறுத்துகிறது.

ஆல், மேல்கூறப்பட்ட காரணங்களுடன், மொத்த பாதுகாப்பு தினத்தின் இன்னொரு அதிமுக்கியமான நோக்கம் ஒன்று உள்ளாது: நமது பாதுகாப்பும் மந்து நாட்டின் பாதுகாப்பும் நம் கைகளில் தாந இருக்கிறது என்பதை சிங்கப்பூரர்களுக்கு உணர்த்துவதே ஆகும்.

தற்போது பாதுகாப்பாக தானே உள்ளோம் என்ற அலட்சியத்தை சிங்கப்பூரர்களின் மனதிலிருந்து நீக்கி ஒவ்வொரு நொடியும் சுற்றுப்புரத்தைன் மீது கவனமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை அழுத்தி கூறவே இந்நாள் ஆண்டுதோறும் அனுசரிக்கப் படுகிறது.

சிங்கப்பூருக்கு அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களின் பல எதிர்பாராத வடிவங்களில் வர முடியும். பயங்கரவாத திட்டங்களும் தாக்குதல்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. பயணிகள் தெரிந்தோ தெரியாமலோ நோய்களை பரப்பிவிடலாம். ஒரு உணர்வற்ற செயல் அல்லது சொல், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, சமூக பதட்டம் தூண்டி பொது மக்களிடயே சண்டை சச்சரவுகளை ஏற்படுத்தலாம். உலக பொருளாதார நெருக்கடி ஒன்று, ஒரு உள்நாட்டு பொருளாதார சிக்கலாக மாற இயலும். இயற்கை பேரழிவுகள், காலநிலை மாற்றம், சக்தி, நீர் மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாக, திருட்டு, சட்டவிரோத புலம்பெயர்வு, மற்றும் இணைய குற்றம், இன்று நாம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் பரவலான மற்ற உதாரணங்கள். இது போன்ற சவால்களுக்கு பதிலடி கொடுக்க ஒவ்வொரு சிங்கப்பூரர்களின் பங்கும் தேவைப்படுகிறது - இளையோர் மற்றும் முதியோர், ஆண்கள் மற்றும் பெண்கள், இனம் அல்லது மதம் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு சிறிய செயலும் நமது பாதுகாப்புக்கு முக்கியம்.

பெயர் உணர்த்துவதுப் போல, மொத்த பாதுகாப்பு தினம் நாம் பல்வேறு அம்சங்களிலும் நம் நாட்டைப் பாதுகாத்து, மொத்த பாதுகாப்பை அடைவதை இலக்காகக் கொண்டுள்ளது. முழு பாதுகாப்பு 5 அம்சங்களாக பிரிக்கப் படுகிறது.

1.        இராணுவ பாதுகாப்பு
நமது மீது தாக்குதல்களை நிறுத்தவும், தாக்கிய போது, நம்மை பாதுகாக்கவும், நாம் ஒரு வலுவான இராணுவ பாதுகாப்பை வளர்ச்செய்ய வேண்டும். அதனால் தான், நமது Singapore Armed Forces (SAF), என்கிற இராணுவ படைகள் உள்ளது. SAF அதுமட்டுமல்லாமல், 18 வயது எட்டிய ஆண் குடிமக்கள் தேசிய சேவை 2 வருடங்களுக்கு புரிய வேண்டும். இதனால், ஆபத்து நேரத்தின் போது, SAF-யில் இருக்கும் இராணுவர்களுடன் தேசிய சேவை புரிந்தவர்களும் நாட்டை தாக்குதல்களிலிருந்து காக்கலாம். தாய்மார்களும், சகோதிரிகளும், மனைவிகளும் இவர்களுக்கு ஆதரவு அளித்து உதவலாம்.

2.        சிவில் பாதுகாப்பு - நெருக்கடி காலத்தில் நம்மை சுற்றியிருக்கும் நம் குடும்பம், நண்பர்கள் மற்றும் மக்கள் கவனிப்பது

3.       பொருளாதார பாதுகாப்பு - ஒரு வலுவான மற்றும் நெகிழ்திறன் பொருளாதாரம் கொண்ட நாடாக விளங்குவது.

4.       சமூக பாதுகாப்பு- ஒர் ஒற்றுமையான சமூகமாகவும் இணநல்லிணக்கத்துடனும் வாழ்வது. சுயனலத்துடன் இல்லாமல், மற்றவர்களிடம் அன்பாகவும் பரிவாகவும் பழகினால் தான்

5.       உளவியல் பாதுகாப்பு - மன உறுதியுடன் இருப்பது

இவ்வைந்து அம்சங்களும், ஒவ்வொருவரும் நமது நாட்டின் பாதுகாப்புக்கு ஒரு வகையிலாவது பங்களிக்கலாம் என்பதை உணர்த்துகிறது.

மொத்த பாதுகாப்பு தினத்தின் 5 தூண்கள்: இராணுவ பாதுகாப்பு, சிவில் பாதுகாப்பு, பொருளாதார பாதுகப்பு, சமூக பாதுகாப்பு, உளவியல் பாதுகாப்பு

இந்நாள் அன்று, மாலை 6.20-க்கு சிங்கப்புரின் அவசர ஒலிகள் ஒலிக்கப்படும். 10 உள்ளூர் வானொலி நிலையங்களிலும் ஒரே நேரத்தில், ஒவ்வொறு ஒலியின் அர்த்தமும், அவற்றின் முக்கியத்துமும் விளக்கப் படும். உண்மையான ஆபத்து நேரங்களின் போது இவ்வொளிகளைக் கேட்டவுடன் என்ன செய்ய வேண்டும் என்று சிங்கப்பூரில் வசிக்கும் ஒவ்வொறுவரும் அறிந்திருக்க வேண்டும் என்பதே இப்பயிற்சியின் குறிக்கோளாகும்.

No comments:

Post a Comment